கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை சார்ந்த காசி என்ற காமுகனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் போது காமுகன் காசி, பெண்கள் தன்னிடம் தாராளமாக பழகினார்கள் என்றும், தாமாக எந்த பெண்களையும் ஏமாற்றவில்லை என்றும், புகார் அளித்த பெண்களிடமே என்னை பற்றி விசாரணை செய்து பாருங்கள் என்றும் வாக்குமூலம் அழைத்திருந்தான். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனக்குமுறல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காமுகனால் பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளதாவது,
என்னைப்போன்ற கொடுமையை சந்தித்த பெண்களுக்கு மட்டும் தான் இதன் வலி புரிகிறது. என்னை போல தான் அனைவருக்கும் நடந்தது. காமுகனின் முகத்தோற்றம், உடல் அமைப்பு, காதல் மயக்கம் என்று எங்களை நாங்களே பறிகொடுத்தோம் என்று பலரும் நினைத்து வருகிறார்கள். காமுகன் காசி பெண்களை ஏமாற்றுவதில் மிகவும் கைதேர்ந்த காமுகன். பெண்களிடம் பேசி பேசியே தன்னகத்தே வசியம் செய்துவிடுவேன். ஆண்களின் வசீகர பேசினால் ஏமார்ந்து இருக்கும் பல பெண்களுக்கும் இது புரியும். எங்களை போல பலரும் ஏமார்ந்துகொண்டு இருக்கின்றனர்.
பெண்களின் விழிப்புணர்விற்காக " நாகர்கோவில் சார்ந்த சுஜி என்ற காசி (வயது 25), திரைப்பட பாணியில் தன்னை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. தன்னை சமூக வலைத்தளத்தில் தனது பெயரிலேயே கணக்குகளை துவங்கி, போலி கணக்குகளின் மூலமாகவும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசி, தனது பெயரில் பல போலியான கணக்குகள் உலாவி வருவதாகவும், தனக்கு வேண்டாத நபர்கள் தன் பெயரை கெடுக்க இவ்வாறு செய்வதாகவும் கூறுவான். பெண்கள் எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், தன்னைப்போல நல்லவனை உலகில் காண இயலாது என்ற அளவிற்கும் அளந்து விடுவான்.
தனது தாயின் மீது மிகுந்த பாசம் இருப்பதாகவும், தனது தந்தையை போல மாமனிதரை பார்க்க இயலாது என்றும், தனது சகோதரியின் மீது அதிகளவு அன்பு வைத்திருப்பவன் என்றும், பெண்களை தெய்வத்திற்கும் ஈடாக நினைத்து கொண்டு இருப்பவன் என்றும், சமூக சேவை மற்றும் பெண்ணியம், நாகரீகம், தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு மதிப்பு வழங்கும் நபர் என்று சமூக வலைத்தளத்தில் அடையாளப்படுத்தியுள்ளான். பிப்ரவரி 14 ஆம் தேதியான காதல் தினத்தன்று பெற்றோர்களின் புகைப்படத்தை பதிவு செய்து " பெண்களே உங்களின் பெற்றோரை நேசியுங்கள்.. காதல் என்பது பெற்றோர்களின் மீது அன்பு கொள்ளுதல்" என்று கூறுவான். மேலும், உங்களை ஆணொருவன் காதலிக்கிறேன் என்று கூறினால் உடனே நம்பாமல், அவனின் மனதை பார்த்து காதல் செய்யுங்கள்.. இதுவே காதல் என்றும் கூறுவான்.
தனக்கென உள்ள பணிகளை மேற்கொண்டு அமைதியாக இருப்பதாகவும், பிறர் காசுகளுக்கு ஆசைப்படாதவன் போலவும், கருணை உள்ளம் கொண்டவன் போலவும், பரந்தளவிலான மனப்பான்மை கொண்டவன் போலவும் சமூக வலைத்தளத்தில் காட்டிய காமுகன், பெண்களிடம் கை ஓங்குபவன் ஆண்மகனே அல்ல என்று கூறி விளம்பரம் செய்துள்ளான். இவனது பதிவுகளை காணும் பெண்கள் இவனை எளிதில் நல்லவன் என நம்பும் நிலையில், பெண்களிடம் நட்பாக பேச துவங்கி தன்னை தொழிலதிபர், பொறியாளர், வழக்கறிஞர், ஆழ்கடல் ஆராய்ச்சியாளர், உடற்பயிற்சி ஆசிரியர் என்று பல்வேறு துறைகளின் கீழ் தன்னை அறிமுகம் செய்து, சமூக சேவை மற்றும் பெண்ணியம் போன்ற பல கருத்துக்களையும் பதிவு செய்துள்ளான்.
இவனது கருத்துக்களுக்கு பதில் கூறும் பெண்களை வயது வாரியாக மற்றும் குடும்ப சூழ்நிலை, பணம், தொழில், திருமண ஆகாத பெண்கள், திருமண முடிந்தவர்கள் மற்றும் அப்பாவித்தனம் என வகைப்படுத்தி, அவர்களில் காதல் தோல்வியுற்ற பெண்கள் மற்றும் மனதளவில் தனிமையில் இருக்கும் பெண்களை குறிப்பாக தேர்ந்தெடுத்து ஏமாற்றி வந்துள்ளான். பெண்களை தன்வசம் கொண்டு வர பெண்ணின் குடும்பம் மற்றும் அவரது பெற்றோர்களின் பின்புலம், பெற்றோர்கள் மகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை, மிரட்டல் விடுத்தால் வரும் பிரச்சனை என்று அனைத்தையும் ஆராய்ந்து இவனது வலையில் விழும் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளான். பெண்ணிடம் எப்படி பேசினால் நம்பிக்கையை பெறுவோம் என்பதை அவர்களின் பேச்சில் வைத்தே கண்டறிந்து, அதற்கான பதிலை கூறி மனதில் இடம்பிடித்து கொள்வான்.
உடல்நலம் மற்றும் மனநலம் என்று அக்கறை செலுத்தி உரிமையை எடுத்து, பெண்ணிற்கு தாய் அல்லது தந்தை இல்லையெனில் அந்த இடத்தில் இருந்து அக்கறை மற்றும் பாசம் கட்டுவது போல நடித்து பெண்களின் அலைபேசி எண்களை வாங்குவான். பெண்கள் அலைபேசி எண்ணை வழங்க மறுக்கும் பட்சத்தில், தன்னிடம் வேலை ரீதியாக வரும் நபர்களுக்கு, உங்களின் துறையை சார்ந்த நபராக இருந்தால் தங்களுக்கு உதவிகள் செய்ய இயலும் என்று பேசி பேசி அனைத்தையும் சாதிப்பான். இந்த நாடகம் சில மாதங்கள் செல்ல செல்ல, பெண்ணிடம் தான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும், உங்களுக்கு சம்மதம் இருக்கும் பட்சத்தில் பெற்றோரிடம் கேட்கிறேன் என்றும், பெற்றோரின் அலைபேசி எண்ணை வழங்குங்கள் என்று கூறுவான்.
தங்களின் கடந்தகாலம் என்பது தேவையில்லை. கடந்த காலத்தை யோசனை செய்து ஒன்றும் ஆகாது. இப்போது மற்றும் மற்றும் இனி வாழ்வது என்பதே முக்கியம். இவனிடம் சுதாரித்து பழக, இவன்குறித்த தகவலை விசாரிக்கும் முன்னதாகவே, தனக்கு தொழில் ரீதியாக எதிரிகள் அதிகம் என்றும், நான்கு மாடி வீடு காட்டியதில் இருந்து என் மீது பலருக்கும் பொறாமை.. என்னை பற்றி பலரும் பல விதமாக கூறுவார்கள்.. என்னை நீ நம்பு.. அது போதும் என்று திரைப்பட பாணியில் காமுகன் நடித்த நடிப்புகள் ஏராளம். இவனது பேச்சில் மயங்கி கிடைக்கும் பெண்கள், இதனையும் நம்பி வாழ்க்கையை சீரழிக்க துவங்குவோம்.
சரி என்று ஒத்துழைக்கும் பெண்களிடம், கணவர் போல வங்கிக்கணக்கில் தன்னையும் சேர்த்து இணைத்துக்கொள்வான். பின்னர் நண்பனாக பேச துவங்கிய காமுகன், காதலனாக மாறி, கணவனமாக மாறுகிறேன் என்று கூறி பெற்றோர்களின் எண்ணையும் வாங்குவான். இதற்கு பின்னர் தான் அவனது விபரீத விளையாட்டே.. அலைபேசியில் இரவு நேரத்தில் வீடியோ கால் செய்து நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்று கூறுவான். மறுப்பு தெரிவதால் " நான் உன் கணவன் அல்லவா? இருவருக்கும் மனதளவில் திருமணம் முடிந்துவிட்டது என்று நான் எண்ணினேன்.. என்னை நீ நம்பு " என்று கூறி ஒத்துழைக்க வைப்பான். இதன்பின்னர் நடப்பதை விடியோவாக பதிவு செய்துகொள்வான்.
பின்னர் இதனைவைத்து மிரட்ட துவங்கும் காமுகன் " தன்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும், மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சமூக வலைதளத்தில் ஆபிஸ படங்கள் அனைத்தும் பதிவேற்றி, உன்னை விபச்சாரியாக சித்தரிப்பேன் " என்றும் மிரட்டுவான். இவனது மிரட்டலுக்கு அடிமையாகி பலமுறை பல வலிகளையும், ரணங்களையும் தாங்க இயலாமல் ஒரு சமயத்தில் பிளாக் செய்துவிட, பெற்றோருக்கே ஆபாச புகைப்படத்தை அனுப்புவேன் என்று மிரட்டினான். இதனால் மனத்துடந்த நான் தற்கொலை நிலைக்கும் தள்ளப்பட்டு, வாழ்க்கையில் செய்த பெரிய தவறை எண்ணி தினமும் அழத்துவங்கினேன். பழகும் நேரத்தில் தன்னிடம் " நான் நாடகக்காதல் செய்யவில்லை.. உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.. நீ படித்து முடித்ததும் திருமணம்.. உனது கடந்த காலம் காயத்துடன் இருக்கலாம்.. இனி நீதான் எனது ராணி.. உன்னை ராணிபோல பார்த்துக்கொள்வேன் என்று கூறுவான்.
காதலிக்க துவங்கிய பின்னர் உண்மையை அறிந்து விலக நினைக்கும் பெண்களை குறித்த இடத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று கூறி மிரட்டுவான். இதனை வைத்து அவனது காரில் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்வான். மேலும், தான் அழைக்கும் நேரத்தில் வரவில்லை என்றால், நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றம் செய்வேன் என்று கூறி மிரட்டுவான். ஒரு துளி நீர் கூட உன் கண்களில் இருந்து வரக்கூடாது என்று கூறிய காமுகன், எனது வாழ்க்கையில் தினமும் கண்ணீரை விடவைத்து காமுகன் பெரும் துரோகத்தையும், மனதில் இருந்து அழியாத வடுவையும் கொடுத்துவிட்டான்.
தனது மிரட்டலுக்கு அடிபணியும் பெண்களின் முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளை தனது பெயரில் மாற்றி, பாதிக்கப்பட்ட பெண்களின் தோழியுடன் பேசி அவர்களுடனும் தொடர்பை ஏற்ப்டுத்திக்கொள்வான். எங்களின் குடும்பம் மற்றும் எங்களை மிரட்ட அவனது நண்பர்களை " பெண்களிடம் வாங்கும் பரிசை, நட்பின் அடையாளமாக வாங்கி வந்ததாக கூறுவான். எங்களை மிரட்ட நபர்களை இப்படியும், கூற இயலாத முறையிலும் கவனித்து கைவசம் வைத்துக்கொண்டு கொண்டான். பெண்கள் இந்த தகவலை அறிந்து தங்களுக்கு தெரிந்த பெண்களிடமும் தெரியப்படுத்துங்கள். ஒரு காமுகன் எப்படியெல்லாம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளான் என்பதை உணர்ந்து, பெண்கள் பாதுகாப்புடன் மற்றும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். எந்த பிரச்சனை என்றாலும் முதலில் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினாலே தீர்வுகள் முடிந்தளவு கிடைக்கும் என்பதே நிதர்சனம்.. பிள்ளைகளை அன்புடன் கவனித்த பெற்றோர்கள் முதலில் ஆத்திரத்தில் இரண்டு அடி அடித்தாலும், பிள்ளையின் எதிர்காலத்தை எண்ணி தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்.. தானாக பிரச்சனைக்கு தீர்வு காணவதாக எண்ணி மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்பதே பலரின் ஆதங்கம்.
Tamil online news Today News in Tamil