கன்னியாகுமரி: இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த கிருஸ்துவ மத போதகர் அதிரடியாக கைது.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்த கிறிஸ்தவ மத போதகர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

19 வயது இளம்பெண் உட்பட 3 இளம்பெண்களை வைத்து கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் லார்ஸ் என்பவர், பெடரல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற மத போதனை கூடம் மூலம் மத போதனை செய்து வந்துள்ளார். அவரின் மத போதக கூடத்துக்கு பல்வேறு தரப்பு ஆண்களும், இளம் பெண்களும் அடிக்கடி வந்து செல்வதுமாக இருந்துள்ளனர்.

ஆனால், அந்த வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் செயல்கள் நடப்பதாக எண்ணிய அந்த பகுதி மக்கள், இது குறித்து  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதபோதகர், இளம்பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவறுகளிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஒரு தாய் ஒருவர் தனது 19 வயது இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KANNIYAKUMARI Christian pastor arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->