தங்கை முறை சிறுமியுடன் முறையற்ற பழக்கம்.. காமுகனின் எண்ணத்தால், ஊசலில் உயிர்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகிறார். இவருக்கும், இவரது அண்ணன் முறை கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில், இதுவே பின்னாளில் அண்ணன் - தங்கை இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், சிறுமி திடீரென கர்ப்பமாகவே, சுமார் 3 மாதம் கழித்து இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. கர்ப்பத்தை கலைக்க அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்யவே, சிறுமியின் உடல்நலம் கடுமையாக பாதித்துள்ளது. 

இதனையடுத்து சிறுமியை அங்குள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, கல்லூரி மாணவர் சஞ்சுவை (வயது 19) கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari child sexual abuse by her brother relationship youngster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->