கழிவுநீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட 3 பேர்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
Kanjipuram 3 dead In septic tang
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் சத்தியம் கிராண்ட் ரிசார்ட் எனப்படுகின்ற கேளிக்கை விடுதி ஒன்று இருக்கின்றது. இந்த விடுதியில் இருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஸ்ரீ பெரும்புதூர், கச்சிப்பட்டு பகுதியில் வசித்து வரும் நவீன்குமார் ( வயது 30), திருமலை (வயது 18), ரங்கநாதன் (வயது 51) உள்ளிட்ட்ட 3 பேர் உள்ளே இறங்கி இருக்கின்றனர்.
அப்பொழுது, விஷவாயு தாக்கியதனால் 3 பேரும் அந்த கழிவு நீர் தொட்டியிலேயே மயங்கி விழுந்தனர். இவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதற்கு முன் அவர்கள் அணிந்திந்த ஆடைகளை வெளியே வைத்து இருக்கின்றனர். ஆனால், நீண்ட ஆன பின்னும் வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகம் ஏற்பட்டு தொட்டிக்குள் எட்டி பார்த்துள்ளனர். அவர்கள் உள்ளே மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் மேற்பட்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீர் தொட்டிக்குள் 15 ஆயிரம் லிட்டர் வரை கழிவு நீர் இருந்தது.
எனவே, முதலில் கழிவு நீரை மோட்டார் வைத்து இறத்துவிட்டு உள்ளே விஷ வாயு கலந்து இருந்ததால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பிணமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kanjipuram 3 dead In septic tang