டாஸ்மாக் அருகே மர்மமாக நின்ற கார்.! பரிசோதனையில் போலீசுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி அருகே உள்ள டாஸ்மாக் அருகில் கார் ஒன்று இரவு வெகுநேரமாகியும் அனாதையாக நின்றுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த காரை பரிசோதித்ததில், உள்ளே ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டை இருந்ததைக் கண்டறிந்தனர். அத்துடன், அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதன் பேரில் விசாரணை நடத்தியதில், இந்த கார் பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. 

அதன்பின் அந்த காரை அவர் ஆறு மாதத்திற்கு முன்பு திருத்தணியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanja found near tasmac 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->