கச்சத்தீவை தாரைவார்க்கையில், எங்களிடம் யாரும் கேட்கவில்லை - கனிமொழி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய பகுதிகளில் நடைபெறும் திமுகவின் கூட்டங்களில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியில் மீனவர்களை சந்தித்த கனிமொழி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், " திமுகவின் ஆட்சி அமைந்ததும் மீனவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ஏற்றுக்கொள்ளப்படும். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கையில், எங்களிடம் யாரும் கேட்கவில்லை " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi Speech about Katchatheevu 23 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->