மனைவியின் முதல் பிரசவத்தில் உடன் இருக்க முடியாத சூழல்.. இளைஞரின் விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் விக்கி. இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் சாயத்தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வருடம் தாம்பரத்தை சார்ந்த ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ரோஜா தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் வீட்டில் இருக்கிறார். இந்த சூழலில், ஒருசில நாட்களில் பிரசவம் ஆகலாம் என்று மாமியாரின் வீட்டில் இருந்து தகவல் கிடைக்கவே, தனது மனைவியுடன் இருக்க ஆசைப்பட்ட விக்கி சென்னை செல்வதற்காக இ-பாஸ் பதிவு செய்துள்ளார். 

ஆனால் கொரோனா கடுமையான ஊரடங்கு காரணமாக இ-பாஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் விக்கி கடுமையான விரக்தியில் காணப்பட்டுள்ளார். மேலும், கடந்த 20 ஆம் தேதி இவர்களின் முதல் திருமண நாளும் வந்துள்ளது. மனைவியுடன் சேர்ந்து முதல் திருமண நாளும் கொண்டாட இயலாமல், பிரசவ நேரத்தில் கூட  இருக்கவும் இயலாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை ரோஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக விக்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் அலைபேசி அழைப்பை எடுக்காததால் நண்பர்களுக்கு விபரத்தை தெரியப்படுத்திய நிலையில், நண்பர்கள் வீட்டிற்கு செல்கையில் வீட்டில் விக்கி பிணமாக தொங்கியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையா மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram youngster suicide police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->