மது போதையில் குளத்தில் இறங்கிய இளைஞர்... அரங்கேறிய பெரும் சோகம்.!!
Kanchipuram youngster died
கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், முதலில் இரண்டு நாட்கள் திறக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டது.
மீண்டும் மேல்முறையீடு செய்து மதுபான கடைகள் திறந்த நிலையில், தமிழகத்தில் குறைந்திருந்த குற்ற சம்பவங்கள் அனைத்தும் வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில், மதுபோதையில் குளத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மாகாளியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பூபதி. இவரது மகன் தினேஷ். இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். தினேஷ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
தினமும் மது அருந்தும் பழக்கத்தை கொண்ட நிலையில், நேற்று மதிய நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் அங்குள்ள தெப்பக்குளத்தில் குளித்துள்ளார். அதிகளவு மது அருந்திய நிலையில், குளத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், தினேஷின் உடலை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram youngster died