காதலுக்காக ரசியாவாக மாறிய ரேவதி.. குடிபோதையில் தினமும் அனுபவித்த நரக வேதனையால், காளியாக மாறி சூரசம்ஹாரம்.! - Seithipunal
Seithipunal


தன்னை கொலை செய்ய வந்த கணவனை அதே கத்தியால் சரமாரியாக வெட்டி துண்டுத்துண்டாக போட்ட சம்பவம் நடந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மளிகை செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நவ்ஷாத். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்ய வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும் என்று கூறி, ரேவதியின் பெயரை ரசியா என்று மாற்றி திருமணம் செய்துள்ளார். 

காதலன் தன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் ரேவதியும் ரசியாவாக மாறி தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் தற்போது 9 வயதுடைய மகனும், 6 வயதுடைய மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நவ்ஷாத்துக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படவே, ஆட்டோ ஓட்டுவதில் வரும் பெரும் பங்கு வருமானத்தை மதுவுக்கு செலவிட்டுள்ளார். மேலும், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

மதுபோதையில் வீட்டிற்கு வரும் நவ்ஷாத் அவ்வப்போது மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்த நிலையில், குழந்தைகளை பாதுகாக்க பக்கத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்து ரசியா தங்க வைத்துள்ளார். இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மனைவியுடன் கடுமையாக நவ்ஷாத் சண்டையிட்டுள்ளார். குழந்தைகள் வழக்கம் போல பக்கத்து வீட்டில் இருந்துள்ளனர். 

இந்த சண்டையில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நவ்சாத் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இறைச்சி வெட்டும் கத்தியுடன் துரத்தியுள்ளார். பயந்துபோன ரசியா வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை தாழிட்டு இருந்துள்ளார். வெளியே இருந்த நவ்ஷாத் மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று கதவை வெட்டியுள்ளார். 

ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரசியா கதவை ஆவேசத்துடன் துறந்ததில் நவ்சாத் கீழே விழுந்துவிடவே, அவர் கையில் இருந்த கத்தியை வாங்கி காதல் கணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். மேலும், இறைச்சி கடையில் இறைச்சிகளை வெட்டுவது போல வெட்டியதில், ரசியாவின் உடல் முழுவதும் இரத்தம் தெரித்துள்ளது. 

அபயக்குரலை கேட்டு அதிர்ச்சியுடன் வந்த அக்கம் பக்கத்தினர் சூரசம்ஹாரம் செய்த ஸ்ரீ மகாகாளி போல முகத்திலும், உடலிலும் என இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்த ரசியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர், ரசியாவே நேரடியாக காவல் நிலையத்திற்கு கத்தியுடன் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். 

கணவனின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த மனைவியை கொலை செய்ய முயற்சித்து, அவர் கத்தியை வாங்கி சூரசம்ஹாரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு பச்சிளம் குழந்தைகள் ஆதரிக்க ஆட்கள் இல்லாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Wife Murder Husband due to Contiuesoly Torture 30 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->