சிறுமியிடம் சில்மிஷம்.. மூதாட்டி பாலியல் பலாத்காரம் கொலை.. வடமாநில காமுகனால் வாலாஜாபாத்தில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியை அடுத்துள்ள தாங்கி கிராமத்தை சார்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் சாந்தி (வயது 49). சாந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களிடம் ஆடு, மாடு வாங்கி மேய்ச்சலுக்கு விட்டு தனது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக  ஆடுமேய்க்க சென்ற சாந்தி, மாலை வரை வீடு திருப்பாமல் இருந்துள்ளார். இவரை காணாது தேடியலைந்த உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சாந்தி அங்குள்ள பெண்டை சாலை பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சூழ்நிலையில், அங்குள்ள கிராமத்தில் இருந்த ரைஸ் மில்லில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பீகார் மாநில வாலிபர் இந்திரஜித் முக்கியா (வயது 25) என்பவன், சிறுமியிடம் மதுபோதையில் தகாத செயலில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்கள், நையப்புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இவனிடம் சந்தேகத்தின் கீழ் சாந்தி கொலை தொடர்பாக விசாரணை செய்ததில், சாந்தியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து இவனின் மீது தகுந்த வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Walajabad old lady sexual abuse and murder by Bihar Youngster


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->