பார்ப்பதற்கே பதறவைக்கும் கல்குவாரியில் அதிர்ச்சி விபத்து.. உருக்குலைந்த வாகனங்கள், பறிபோன உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த கோர விபத்தில் இரண்டு பேர் பலியாகி, 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் மாதூர் பகுதியில் கல்குவாரி இருக்கிறது. இந்த கல்குவாரியில் சென்னையை சேர்ந்த முத்து என்பவர் குத்தகைக்கு எடுத்து கற்களை பணியாட்கள் வைத்து வெட்டியெடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலமாக பாறைகளை வெட்டி எடுத்த போது, எதிர்பாராத விதமாக அது சரிந்து விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்ததாக தற்போது கூறப்படும் நிலையில், இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 10 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், வாகனங்களில் அதிர்வு காரணமாக பாறைகள் தொடர்ந்து சரிந்துகொண்டே இருப்பதால், மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Uthiramerur Quarry Accident 2 Persons Died 20 Injured 10 Rescued


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->