புதுமண பெண் மர்ம மரணத்தில் அரங்கேறிய கொடூரம்.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.. விசாரணையில் அதிர்ச்சி.!!
Kanchipuram Uthiramerur girl death case mystery discovers by police
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை சார்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்த் சி.பி.ஐ.எம் மாதர் சங்க தலைவியாக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் செந்தாமரை (வயது 23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக செந்தாமரைக்கும், இதே பகுதியை சார்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 9 ஆம் தேதி உத்திரமேரூரில் இருக்கும் தாய் வீட்டில் செந்தாமரை கழிவறை செல்லுகையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்காமல், உடலை இரகசிய அடக்கம் செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். பின்னர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செந்தாமரையின் உறவினர்கள் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், பிரேத பரிசோதனை முடிவில் செந்தாமரை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறிக்கை வந்துள்ளது. பாலாஜியிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்னதாக செந்தாமரை மற்றொரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து இருந்த செந்தாமரை கணவரது இல்லத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நிலையில், பெற்றோர்கள் மகளுக்கு ஆறுதல் கூறி, சமாதானம் பேசியும் எடுபடவில்லை. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த பாலாஜி, ஆத்திரத்தில் தனது மகளை அடித்து, கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பாலாஜியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram Uthiramerur girl death case mystery discovers by police