வழிப்பறியில் ஈடுபட்ட பிராடு பிரதர்ஸ்.. 4 மேன் டீமை கூட்டிவந்து அரங்கேறிய கொலை.. பரபரப்பு சம்பவம்.!
Kanchipuram Sriperumbudur Forgery Robbery Brother Murder by 4 Man team at Madampakkam Lake 30 April 2021
மாடப்பாக்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மாடம்பாக்கம் பகுதியை சார்ந்த சகோதரர்கள் முகமது அலி, இஸ்மாயில் அலி, இம்ரான். இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டாரங்களில் வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் அங்குள்ள மாடம்பாக்கம் எரிப்பகுதியில் அமர்ந்து மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த நிலையில், அங்கு பந்தல் போடும் தொழிலாளி ரமேஷ் என்பவர் கை, கால் கழுவ வந்துள்ளனர்.
அவர் தனிமையில் வந்திருப்பதாக எண்ணி மேற்கூறிய முகமது அலி, இஸ்மாயில் அலி, இம்ரான் ஆகிய பிராடு பிரதர்ஸ், கத்தி முனையில் ரமேஷிடம் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு சென்ற ரமேஷ், தனது தரப்பு 3 நண்பர்களை அழைத்து வந்து பிராடு பிரதர்ஸை தட்டிக்கேட்க வைத்த நிலையில், அவர்களும் பதிலுக்கு சவுடால் விட்டு சலம்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தரப்பு மூவரையும் அடித்து நொறுக்கிய நிலையில், இம்ரான் தப்பி சென்றுள்ளார்.
நால்வர் கும்பலிடம் சிக்கிய பிராடு பிரதர்ஸ் முகமது அலி, இஸ்மாயில் அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த தகவலை காவல் துறையினருக்கு தெரியப்படுத்திய ரமேஷ் தரப்பு, நேரடியாக சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலையான இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanchipuram Sriperumbudur Forgery Robbery Brother Murder by 4 Man team at Madampakkam Lake 30 April 2021