உல்லாசம் அனுபவிக்க தடையாக இருந்த பச்சிளம் குழந்தை கொலை.. அடுத்த அட்டம்ப்ட்டில் சிக்கிய பெண்.!
Kanchipuram Sriperumbudur Child Murder Case Mother Arrest
காஞ்சிபுரம் மவ்வட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சித்ரா (வயது 25). இவருக்கும், ஆனந்தன் என்ற 45 வயது நபருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற 5 வயது மகனும், அருண் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக தம்பதியின் இளைய மகன் அருண் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்படவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், வீட்டின் மேற்கூரையில் திடீரென பிடித்த தீயில் சிக்கி மகன் உயிரிழந்ததாக சித்ரா நாடகமாடியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், சித்ராவின் மூத்த மகன் கார்த்திக் அங்குள்ள முட்புதரில் இருப்பதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனிடம் விசாரணை செய்ததில் தாயுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து உறவினர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு காவல் துறையினர் செல்லவே, சித்ரா குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், சித்ராவுடன் தனிமையில் இருந்த ஆண் நண்பர் இது குறித்த விடியோவை எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. இதன்பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்க குழந்தை இடையூறாக இருப்பதால் கொலை செய்ய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram Sriperumbudur Child Murder Case Mother Arrest