நண்பனை காண சென்றவருக்கு அரங்கேறிய சோகம்.. படுகொலையை அரங்கேற்றி மர்ம கும்பல் அட்டூழியம்.!
Kanchipuram Sirukaveripakkam Youngster Murder police investigation about it
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் பஜனை கோவில் பகுதியை சார்ந்தவர் ரவி சாம்சன். இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். இவரது இரண்டாவது மகன் எலிசா. இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள நண்பரின் இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இவர் சிறுகாவேரிப்பக்கம் அருகே எலிசாவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இவர் எதற்காக? கொலை செய்யப்பட்டார். இவருக்கும், யாருக்கேனும் முன் விரோதம் இருந்ததா? என்பது குறித்த விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram Sirukaveripakkam Youngster Murder police investigation about it