மேல்சட்டை இல்லாமல், பக்தி பரவசத்துடன் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய்யை மிகப்பெரிய நடிகராக மாற்றியுள்ளார். இந்நிலையில், தற்போது தந்தைக்கும் - மகனுக்கும் இடையே அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. 

இதில், புரட்சி எல்லாம் பேசிய சந்திரசேகர், அவ்வப்போது நான் மாற்று மதத்தை சார்ந்தவன் என்றும் கூறி ரசிகர்களை திரட்டி ஆதரவாக சேர்த்து வந்த நிலையில், தற்போது மடைமாறி பாயும் வெள்ளம் போலவும் அவ்வப்போது செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் அருகேயுள்ள குபேர சித்தர் பீடத்திற்கு வருகை தந்தார். இந்த கோவிலில் வியாழக்கிழமை நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதன் பின்னர் ராஜ குபேர சித்தர் சாமியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், சுவாமி கவசங்களும் அவரின் தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பயபக்தியுடன் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், மேல்சட்டை இன்றி சாமி தரிசனம் செய்து ஆசி வாங்கினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, " இப்போது பேசுவதற்கு எதுவுமில்லை. தை மாதம் பிறந்த பின்னர் நான் கூப்பிட்டு பேசுகிறேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram SA Chandra Sekhar Temple Visit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->