பப்ஜியிலேயே பக்கா பிளான்.. தான் வைத்த குண்டில், எலிபோல சிக்கிய கொலைகார புள்ளிங்கோஸ்...!!
Kanchipuram Pullingow arrest police investigation
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில், கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், ரவுடிகள் அசோக் மற்றும் விக்னேஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு வந்த நிலையில், போதையில் வாகனத்தை ஓட்டி வந்து, நிலை தடுமாறி விழுந்ததில் நாட்டு வெடி குண்டு வெடித்து காயமடைந்ததாக கூறப்பட்டது.
சம்பவ இடத்தில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கொலை சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி குள்ள சீனுவின் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்குடன் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த அசோக், திருட்டுத்தனமாக மறைத்து வைத்திருந்த அலைபேசியில் பப்ஜி விளையாட்டை விரும்பி விளையாடி வந்ததும், இந்த விளையாட்டு மூலமாக அனைவரிடமும் எளிதாக உரையாட முடியும் என்ற நிலையில், கொலை செய்வதற்கான திட்டத்தை தனது கூட்டாளிகளுடன் பகிர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதன்படி, விக்னேஷ் மற்றும் வினோத் ஆகியோருடன் சேர்ந்து விளையாட்டில் பேசிய கொலை திட்டத்தின் படி, ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் மொட்டை விக்கியை கொலை செய்ய திட்டமிட்டு சென்ற இடத்தில், " தன்வினை தன்னை சுட்டது " விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram Pullingow arrest police investigation