5 மாத கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு.. காஞ்சிபுரத்தில் பெரும் சோகம்.!!
Kanchipuram pregnant girl suicide attempt police investigation
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் வெண்காடு கிராம பஜனை கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவரது மனைவியின் பெயர் புவனேஸ்வரி (வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது.
இவர்கள் இருவருக்கும் சிவரஞ்சனி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ள நிலையில், புவனேஸ்வரி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சத்யமுர்த்தி தாம்பரத்தில் மெக்கானிக் கடை வைத்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
தற்போது விவசாய பணிகளை தொடர்ந்து கவனித்து வரும் நிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், மாமியாரிடமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புவனேஸ்வரி நேற்றுமுன்தினத்தின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram pregnant girl suicide attempt police investigation