காதல் கணவனின் அனுதின சித்ரவதைகள்.. கர்ப்பிணி மனைவிக்கு அரங்கேறிய நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கிளம்பி புதூர் கிராமத்தைச் சார்ந்தவன் அரிகிருஷ்ணன். இவன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தேவி என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளான். முதலில் தேவி காதலை ஏற்காமல் இருந்து வந்த நிலையில், தொடர்ந்து கொடூரன் நிகழ்த்தி வந்த பல வித்தைகள் மற்றும் தொல்லைகளுக்கு பின்னர் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். 

பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்த தேவி, பெங்களூரில் செவிலியர் நான்கு வருட பட்டம் படிக்க சென்றுள்ளார். அங்கு சென்றும் காதல் லீலை புரிந்த கொடூரனின் நடவடிக்கை குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் அமைதியாக வசித்து வந்த குடும்பத்தினர், அடித்துக்கொள்ளாத குறையாக சண்டையிட்டு வந்துள்ளனர். 

குடும்பத்தினரின் தகராறில் தேவி தனக்குக் கிடைக்காமல் சென்று விடுவாள் என்ற பயத்தில், தேவியின் படிப்பிற்கு ஆப்பு வைக்கும் விதமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக, பெங்களூருவில் இருந்து கட்டாய படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி சொந்த ஊருக்கு தேவியை அழைத்து வந்துள்ளான். 

ஒரு கட்டத்தில் அரிகிருஷ்ணன் செயல்பாடுகளால் வெறுத்துப்போன தேவி, விலக முயற்சித்த நிலையில், திரைப்பட பாணியில் தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், குடும்பத்தினரின் பிரச்சனையால் இவ்விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. பின்னர் காவல் துறையினர் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். 

இந்தப்பேச்சுவார்தை வெற்றியடைவே, இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் காமுகனின் கொடூர பக்கம் வெளியாக துவங்கியுள்ளது. திருமணம் முடிந்த முதல் நாளிலிருந்தே தன்னை ஏன் காதலிக்காமல் அலையவிட்டாய்? என்று தேவியை துன்புறுத்தி வந்துள்ளான். 

மேலும், மது போதையில் வரும் சமயத்தில் எல்லாம் தேவியை அடித்து துன்புறுத்தியதாக தெரியவருகிறது. தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த யாரிடமும் பேசக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தேவி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தும், கணவரின் கட்டுப்பாடுகளை மதித்து இருந்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, மீண்டும் தேவியை அடித்து துன்புறுத்தி தகராறு செய்துள்ளான். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவியை கர்ப்பிணி என்றும் பாராது, கடப்பாரையை எடுத்து மண்டையில் ஓங்கி அடித்துள்ளான். இதில், தேவியின் மண்டை பிளந்து, மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

தேவியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக தேவியின் உடலை அனுப்பி வைத்தனர். பின்னர் ஹரி கிருஷ்ணனை கைது செய்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், காதலித்த பெண்ணை தினமும் சித்ரவதை செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கணவன் என்று பெண்மணி பொறுத்துச் சென்றும், கர்ப்பிணி காதல் மனைவிக்கு அரங்கேறியுள்ள சோகம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram pregnant girl murder by husband police investigation


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->