கள்ளக்காதல் விவகாரம்... கட்டையால் அடித்து கொலை... ஊரடங்கால் அரங்கேறிய சம்பவம்.!!
Kanchipuram murder case police investigation due to illegal affair
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பருத்திக்கொல்லை பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார் (வயது 30). இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதே பகுதியில் வசித்து வரும் நபரின் பெயர் சண்முகசுந்தரம் (வயது 38). இவர் உத்திரமேரூர் பகுதியில் பேரூராட்சி ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வரும் நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக சண்முகசுந்தரம் மற்றும் திவ்யா மற்றும் திவ்யா காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலிற்கு திவ்யாவின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகனிற்கு திவ்யாவை திருமணம் செய்து முடித்துள்ளனர். என்னதான் இருந்தாலும் காதலை மறக்க இயலாத இருவரும், அவ்வப்போது தனிமையில் சுற்றி வந்துள்ளனர்.
பின்னர் இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் ஜெய்குமாருக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கின் காரணமாக இருவரும் சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளக்காதல் ஜோடிகள் தங்களை பிரிய மனமில்லாது தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், திவ்யாவின் இல்லத்தின் வழியே அவ்வப்போது சென்று வந்த சண்முகசுந்திரத்தை காண திவ்யா வீட்டு வாசலில் இருந்து வந்த நிலையில், இதனைக்கண்ட ஜெயக்குமார் திவ்யா அண்ணன் தினேஷ் (வயது 27) ஆகியோருடன் சண்முகசுந்தரத்திடம் சென்று பேசியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஜெயக்குமார் சண்முகசுந்தரத்தை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கவே, இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமகா உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram murder case police investigation due to illegal affair