இரண்டு குழந்தைகள் பிணமாக கிணற்றில்.. ஒரு குழந்தை வீட்டில்.. சுடுகாட்டு மரத்தில் பிணமாக தந்தை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்கிற துளசி (வயது 32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற 12 வயது மகளும், ஷாலினி என்ற 10 வயது மகளும், சேதுராமன் என்ற 8 வயது மகனும் உள்ளனர். 

ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இவர்களுக்குள் தகராறு ஏற்படும் நேரத்தில் கோவிந்தம்மாள் தனது தாயின் இல்லத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் ஆறுமுகம் சமாதானம் செய்து அழைத்து வரவே, நேற்று முன்தினத்தின் போது வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் கோவிந்தம்மாள் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், மாலையில் வீடு திரும்பி வந்து பார்க்கையில் மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கோவிந்தம்மாளின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. 

இதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் மீதமுள்ள குழந்தைகளை தேட பெரும் அதிர்ச்சியாக அங்குள்ள சுடுகாட்டு மரத்தில் ஆறுமுகம் பிணமாக தொங்கியுள்ளனர். மீதமுள்ள இரண்டு குழந்தைகளும் அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். 

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தைகள் மற்றும் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram murder case police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->