கணவனின் நடத்தை மீது சந்தேகம்.. அண்ணனை வைத்து கணவனை போட்டுத்தள்ளிய பாசக்கார மனைவி.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு கோவூர் பகுதியை சார்ந்தவர் பாஸ்கர் (வயது 37). இவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உஷா (வயது 45), அவர்களின் குழந்தை ஆகியோரை காணவில்லை என்று பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், பாஸ்கரின் மனைவி உஷா, மைத்துனர் பாக்யராஜ் (வயது 39) ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்ததும் அம்பலமானது. 

இதனையடுத்து, மாங்காடு காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான தனிப்படை காவல்துறை அதிகாரிகள் உஷா மற்றும் பாக்யராஜை தேடி வந்த நிலையில், இருவரையும் கைது செய்தனர். மேலும், பாக்யராஜின் நண்பர்களான வெங்கடேசன் (வயது 40), கோகுல் (வயது 24) ஆகியோரையும் கைது செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பான முழுமையான விசாரணையில், பாஸ்கருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக உஷா சந்தேகப்பட்ட நிலையில், கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த உஷார் வீட்டில் இருந்த இரும்புக்குழாயை எடுத்து பாஸ்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பாஸ்கர் மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, இந்த தகவலை உஷா தனது அண்ணன் பாக்யராஜுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

வீட்டிற்கு வந்த பாக்யராஜ் தனது நண்பர்கள் மூலமாக பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பாஸ்கர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, பாஸ்கரின் உடலை மறைக்கும் பொருட்டு பாஸ்கரின் உடலை கை, கால் கட்டி கல்குவாரியில் வீசி சென்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உஷா மற்றும் அவரது அண்ணன் உட்பட 4 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Mangadu Kovur Husband Basker Murder by Wife Usha due to Affair Doubts 5 may 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->