சொத்து பிரச்சனையை பேச சென்று, ஒரு வருடமாக மாயமான கணவன்.. கைக்குழந்தையுடன், கண்ணீரில் பெண்மணி.!!
Kanchipuram man missing police investigation
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெம் நகர் பகுதியை சார்ந்தவர் கொஞ்சி அடைக்கண். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் இருவருக்கும் மூன்று வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சொத்து பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு சென்ற கொஞ்சி அடைக்கண் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரில், " எனது கணவர் கொஞ்சி அடைக்கண் திருமணத்திற்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூரில் சொந்தமாக வீடுகட்டி அண்ணன் மற்றும் அண்ணி சித்ராவுடன் வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் வீட்டினை கேட்கவே, அண்ணி சித்ரா வீட்டினை தர இயலாது என்று கூறியுள்ளார்.
சித்ரா கொலை மிரட்டலும் விடுத்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞரை சந்திக்க சென்ற நபர் மாயமாகியுள்ளார். இவரை கண்டறிந்து தரக்கூறி பழனியம்மாள் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram man missing police investigation