காஞ்சிபுரம்: ஒரு வருடமாக திகில் பேய் படங்களை பார்த்த 14 வயது சிறுமி, பயத்தில் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இணையவகுப்புகள் நிறைவுபெற்றதும் ஒரு வருடமாக செல்போனில் பேய் படங்களை விரும்பி பார்த்து வந்த 14 வயது சிறுமி, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கபட்டரை கலைஞர் தெருவில் உள்ள சின்னசாமி நகர் பகுதியை சார்ந்தவர் கோடிஸ்வரன். இவரது மனைவி கீதா. கோடிஸ்வரன் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ரக்சனா என்ற 14 வயது மகளும், தர்மேஷ் என்ற 12 வயது மகனும் உள்ளனர். 

ரக்சனா செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இணையவழியில் நடைபெறும் வகுப்பில் மாணவி பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 1 வருடமாக வீட்டில் இணையவழியில் கல்வி பயின்று வந்த சிறுமி, இணையவழிக்கல்வி இல்லாத பிற நேரங்களில் தொடர்ந்து திகில் நிறைந்த பேய் படங்களை அதிகளவு பார்ப்பதை வாடிக்கையாக்கியுள்ளார்.  இதன் மூலமாக 1 வருடமாக தொடர்ந்து பேய் படங்களை பார்த்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திடீரென தனக்கு பயமாக உள்ளது என்றும், அமானுஷ்யம் தொடர்பான கனவுகள் வருகிறது என்றும் பெற்றோரிடம் தெரிவித்த ரக்சனா மிகுந்த பயத்துடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ரக்சனா தனது வீட்டின் படுக்கைறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மகள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த பெற்றோர்கள், படுக்கை அறைக்கு சென்று பார்க்கையில் ரக்சனா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், அவர் உயிரிழந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மகளின் இறப்பை அறிந்த பெற்றோர்கள் ரக்சனாவின் உடலை கட்டியணைத்து கதறியழுதது மருத்துவமனை வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர், ரக்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Child Watching Horror Movies Last One Year Now Suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->