தோழியின் 15 வயது மகளை சீரழித்த காமுகன்.. மயக்க மருந்து கொடுத்து அரங்கேற்றிய அட்டூழியம்..!
Kanchipuram Child Sexual abuse by His Mother Affair Man Police Arrest Culprit
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியராக இராமச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவருடன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்மணியுடன், இராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அவ்வப்போது இராமச்சந்திரன் பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளான்.
இந்நிலையில், அந்த பெண்மணிக்கு 15 வயதுடைய மகள் உள்ள நிலையில், காமுகன் இராமச்சந்திரனிற்கு சிறுமியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பெண்ணின் வீட்டிற்கு சென்ற காமுகன், அவரை கடைக்கு சென்றுவர சொல்லியுள்ளான்.
இதன்பின்னர், சிறுமிக்கு மயக்க மருந்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமிக்கு மயக்கம் தெளிந்ததும் விஷயத்தை கூறி, இதனை வெளியே தெரிவித்தால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் இதனை தெரிவிக்காமல் இருந்த நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் மாற்றத்தை கவனித்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாய் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காமுகன் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanchipuram Child Sexual abuse by His Mother Affair Man Police Arrest Culprit