இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம்.. தமிழகத்தில் அதிகரித்த கொரோனா தொற்று.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 3,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,358 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 46 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 47,650 பேர் பாதிக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. சேண்மனையில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 1,956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம் என அறிவித்துள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் என தெரிவித்துள்ளனர். அணுமின் நிலைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதியில் முழு முடக்கம் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalpakkam nuclear power station full lock down


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->