ஓயாமல் தாயிடம் சண்டையிட்ட தந்தை... பிரசவத்திற்கு வந்து தந்தையை கொலை செய்த மகள்.!!
Kalpakkam daughter killed father police investigation
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் வடபட்டினம் காட்டுக்காலணி பகுதியை சார்ந்தவர் சேகர் (வயது 48). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஏகவள்ளி (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் நந்தினி (வயது 19) அருணகிரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தருணத்தில், நந்தினி தனது முதல் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த சமயத்தில், சேகருக்கும் ஏகவள்ளிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்படவே, தினமும் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல சேகர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் நந்தினிக்கும், சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, நந்தினி காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தந்தையின் மார்பில் குத்தவே, நிலைகுலைந்த சேகர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் சேகர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நந்தினி மற்றும் ஏகவள்ளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kalpakkam daughter killed father police investigation