கம்பி நீட்ட முயன்ற காதலன்.. காவல் நிலையத்தில் காவற்படை சூழ நடந்த திருமணம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா. இதே ஊரை சேர்ந்தவர் பூவரசன். பூவரசன் ஏரோனாட்டிகள் பொறியாளராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமண ஆசை வார்த்தை பூவரசன் நர்மதாவுடன் நெருங்கி பழகியுள்ளான். இதனால் தற்போது நர்மதா 6 மாத கர்ப்பிணியாக உள்ளநிலையில், கர்ப்பத்தை இனிமேலும் கிடைக்க முடியாது என்பதால், திருமணம் செய்து கொள்ள கூறி காதலனை வற்புறுத்தியுள்ளார். 

இதற்கு பூவரசன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த நர்மதா கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் நாடகமாடி தலைமறைவாகியுள்ளான். 

இதனையடுத்து மனமுடைந்த நர்மதா சில தினங்களுக்கு முன்னதாக அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யவே, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இது குறித்து அறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, பூவரசனின் பெற்றோரை அழைத்து மகனை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு எச்சரித்துள்ளனர். 

விஷயத்தின் வீரியத்தை உணர்ந்த பெற்றோர், இது குறித்து மகனிற்கு தகவல் தெரிவிக்கவே, பூவரசன் இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின்னர் நர்மதாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். காவல் நிலையத்தில் வைத்தே திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் புதுமண தம்பதிகளாக புறப்பட்டு சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KALLAKURICHI YOUNGSTER MARRIED LOVE GIRL IN POLICE STATION


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->