குப்பைத்தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் பிஞ்சு குழந்தை.. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனையில், உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் தொப்புள் கொடியுடன் ஆண்குழந்தை பிணமாக இருந்துள்ளது. 

இந்த குழந்தை துணிப்பையில் இரத்தக்கறையுடன் பிறந்த சில நிமிடத்தில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Ulunthurpet Bron Baby Recovered Died Body by Police 13 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->