#தமிழகம் || தொடக்கப்பள்ளியில் 10க்கும் அதிகமான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு ஆசிரியர் போக்ஸோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே 10க்கும் அதிகமான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த, பொறுப்பு தலைமை ஆசிரியரை போலீசார் சற்று முன்பு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக, ஆசிரியர் துளசிராமன் தற்போது போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வானவரெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த துளசிராமன், தொடர்ந்து நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து தற்போது போலீசார் துளசிராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi school child abuse case teacher arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->