கலவரத்தை தடுப்பது எப்படி.. நூதன முறையில் கலவர தடுப்பு ஒத்திகை நடத்தி, காமெடி பீசாக்கிய காவல்துறை.!
Kallakurichi Sangarapuram Violent Control Rehearsal by Police
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள இரு கிராமங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இரு கிராமங்கள் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்புகை குண்டுகள் வீசும் அளவிற்கு சம்பவமும் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது காவல் துறையினர் கலவரத்தை தடுக்க சுவாரஸ்ய சம்பவத்தை நடத்தியுள்ளனர். மேலும், கலவர தடுப்பு ஒத்திகை என்ற பெயரில், சுவாரஸ்ய சம்பவம் காவல்துறையினரால் நடதப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிராமங்களில் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இரண்டு கிராம மக்களும் முதலில் தாக்கிக் கொண்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பான தகவல் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஆனால், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இரு தரப்பும் கலவரம் செய்யும் நோக்கத்தோடு இருந்துள்ளது. இதன்பின்னர், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருகிராமத்தினர் வந்ததும் கலவரம் நடந்தால் தடுப்பது எப்படி என கண்ணீர் புகையெல்லாம் வீசி, தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என போர்ப்பயிற்சி போல கலவர தடுப்பு பயிற்சி நடந்துள்ளது. இதனால் சண்டையிட வந்தவர்கள் அனைவரும் முகத்தில் 100 வாட்ஸ் லைட் கெட்டிவிட்டார் போல பற்களை காண்பித்து சிரிப்பலைகளை எழுப்பவே, காவல்துறையினரும் கலவர தடுப்பு பயிற்சியை நிறைவு செய்து இரண்டு கிராமத்தினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kallakurichi Sangarapuram Violent Control Rehearsal by Police