சந்தேக பிராணியாக குடிகார கணவன்.. நல்லது சொன்ன மாமியாரும், மனைவியும் கொடூர கொலை.! - Seithipunal
Seithipunal


சந்தேக எண்ணம் கொண்ட கொடூரன் தனது மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் அடித்து கொலை செய்து தலைமறைவாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை அருகே இருக்கும் கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி. மது போதைக்கு அடிமையாக இருந்த முருகன், தினமும் மதுபானம் அருந்திவிட்டு மனைவியிடம் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளான். 

இது தொடர்பாக இருவருக்கும் இடையே பல தகராறுகள் அவ்வப்போது நடந்து வந்த நிலையில், ஒரு சமயத்திற்கு மேல் கோபித்துக்கொண்ட மகாலட்சுமி அங்குள்ள முருகம்பட்டியில் இருக்கும் தனது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக முருகன் மனைவியின் வீட்டிற்குச் சென்ற நிலையில், அங்கு மது போதையில் சென்று தகராறு செய்துள்ளார். மேலும், மனைவியின் தாயாரிடம் மனைவியை தன்னுடன் அனுப்பாத பட்சத்தில், தான் வாங்கிக் கொடுத்த நகைகளை திருப்பித் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

இதனையடுத்து, மகாலட்சுமியின் தாயார் தனது மருமகனை சமாதானப்படுத்தி, வாழ்க்கைக்கான ஆலோசனை கூறி வீட்டிலேயே தங்க வைத்த நிலையில், சந்தேகத்துடன் இருந்து முருகன் மதுபோதையில் நள்ளிரவு சமயத்தில் மனைவி மற்றும் மாமியாரை வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து அடித்து கொலை செய்து இருக்கிறார். 

கொலையை அரங்கேற்றிய முருகன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லவே, காலையில் அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் தாயும், மகளும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள முருகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Manalurpettai Wife and Mother In Law Murder Police Investigation 14 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->