கணவனை போட்டுத்தள்ளி கள்ளக்காதலனுடன் குஜால்.. வருடம் கழித்து சிக்கிய கும்பல்..!
Kallakurichi illegal affair murder police arrest culprits
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆத்தூர் கிராமத்தை சார்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகன் பாலமுருகன் (வயது 26). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (வயது 23). பாலமுருகனிற்கும் - மணிமேகலைக்கும் மகன் உள்ள நிலையில், மணிமேகலை மீண்டும் கர்ப்பிணியாக இருந்தார். இதனையடுத்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையை காண சென்ற பாலமுருகன் மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால், அங்குள்ள காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மணிமேகலைக்கும் - அக்கிரமத்தை சார்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்ததில் கொலை தெரியவந்துள்ளது. இது குறித்து மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், " எனக்கும், மணிமேகலைக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த விவகாரம் தொடர்பான தகவலை அறிந்த பாலமுருகன், எங்களை கண்டித்தார்.
இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே, இரண்டாவதாக பிறந்த குழந்தை என் முக சாயலில் இருந்ததாக கூறி பாலமுருகன் மருத்துவமனையில் வைத்து பிரச்சனை செய்துள்ளார். இந்த விஷயத்தை மணிமேகலை என்னிடம் தெரியப்படுத்தவே, பாலமுருகனை கொலை செய்யட்ட திட்டமிட்டேன். எனது திட்டப்படி, விழுப்புரத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பாலமுருகனை சம்பவத்தன்று கொடூரமாக கொலை செய்து, சாக்குமூட்டையில் உடலை எடுத்து சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டு சென்றேன்.
எரியூட்டியதில் எஞ்சியிருந்த எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை அங்குள்ள ஆற்றில் வீசினேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இத வழக்கில் தொடர்புடைய மணிமேகலை, மணிகண்டன் மற்றும் மணிகண்டனின் சகோதரர் தனசேகரை காவல் துறையினர் கைது செய்தனர். பாலமுருகன் மாயமான வருத்தம் இல்லாமல் மணிமேகலை இருந்தது உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 மாதம் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு பின்னர் ஒருவருடம் கழித்து கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kallakurichi illegal affair murder police arrest culprits