பி.இ படித்தும் வேலையில்லை.. இளைஞரின் விபரீத முடிவால் அரங்கேறிய சோகம்.!!
Kallakurichi Chinna Salem youngster suicide due to Jobless
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சார்ந்தவர் அருணாசலம். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகனின் பெயர் தமிழ்செல்வன் (வயது 26). நேற்று முன்தினம் நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் அங்குள்ள புறவழிச்சாலை காட்டுப்பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு, தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வாலிபரின் சட்டைப்பையில் கடிதம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், பி.இ படித்தும் எனக்கு ஊரடங்கால் வேலை பறிபோனது, பிற வேலை தேடியும் கிடைக்காததால் விரக்தியில் இம்முடிவை எடுக்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார். இந்த விஷயம் தடோரப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kallakurichi Chinna Salem youngster suicide due to Jobless