குழந்தையை பூவாக எண்ணவேண்டிய சூழ்நிலையில், மதிகெட்ட ஆத்திரத்தால் அரங்கேறிய சோகம்.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!!
Kallakurichi child murder Police arrest Mom in Law
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகேயுள்ள மேல்விழி கிராமத்தை சார்ந்தவர் ரொசாரியோ (வயது 45). இவரது மனைவி ஜெயராணி. இந்த தம்பதிக்கு ரென்சிமேரி என்ற 5 வயதுடைய குழந்தை உள்ளது. கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக ஜெயராணி இறந்துவிட்ட நிலையில், ரொசாரியா மற்றொரு பெண்மணியை திருமணம் செய்துள்ளார்.
இதனால் தாயினை இழந்த ரெசின்மேரி, ஜெயராணியின் தாயார் பச்சையம்மாள் (வயது 70) பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இதே இல்லத்தில் ஜெயராணியின் அக்கா ஆரோக்கியமேரி (வயது 35) இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை.
நேற்று காலை நேரத்தில் பச்சையம்மாள் கூலி பணிக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு சாப்பாடாக ஆரோக்கியமேரி இட்லி கொடுத்துள்ளார். ஆனால், பச்சிளம் குழந்தை இட்டிலி தனக்கு வேண்டாம் என்று கூறிய நிலையில், பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளாகிய மேரி, குழந்தையை தரதரவென இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த கட்டையால் தாக்கிய நிலையில், குழந்தை அலறியுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆரோக்கிய மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kallakurichi child murder Police arrest Mom in Law