வட்டியை கேட்டு டார்ச்சர் செய்த வங்கி... வீடியோ முடிவில் விபரீத முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் வெண்கலம் கிராமத்தைச் சார்ந்தவர் பாண்டுரங்கன். இவர் கடந்த 2008 - 2009 ஆம் வருடத்தில், ரிஷிவந்தியம் சிட்டி யூனியன் வங்கியில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக 2 லட்சம் ரூபாய் கல்விக் கடனாக பெற்றுள்ளார். 

இவர் படிப்பு முடித்த நிலையில், உரிய பணி கிடைக்காத காரணமாக, கல்விக் கடனை முறையாக கட்ட இயலவில்லை. இதனால் வங்கிகள் ஏஜெண்டுகள் கடன் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பாண்டுரங்கன், பெங்களூரில் தான் வசித்து வந்த வீட்டில் அருகே இருக்கும் பெரிய கட்டிடத்தின் மீது ஏறி அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மேலும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும், இது குறித்த வீடியோ பதிவாக பதிவு செய்துள்ள நிலையில், இவரது உடல் பெங்களூரில் இருந்து நேற்று சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi bank torture man suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->