"தினகரன் இத செய்ஞ்சப்பவே., மொத்தமும் க்ளோஸ்" அமமுகவை கதற வைக்கும் எம் எல் ஏ.!!
kalaichelvan mla says about dhinakaran
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன் தினகரன் ஆதரவாளராக அடையாளப்படுத்தப்பட்டார். மேலும், அவர் தினகரன் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு சபாநாயகர் கலைச்செல்வன் நோட்டீஸ் அனுப்பினார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், "தினகரன் என்றைக்கு தனிக்கட்சி துவங்கினாரோ, அப்போதே நான் அவருடன் இருந்த தொடர்பை துண்டித்து விட்டேன். எனக்கும் ,அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் தினகரன் கட்சியின் உறுப்பினர் கூட இல்லை. ஜெயலலிதாவை முதல்வராக்கத்தான் மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
சசிகலாவை பொதுச்செயலாளர் என கூறியவர்கள் தான் அவரை முதல்வர் என்றும் கூறினர். அதனால் தான் நாங்களும் அதை ஆதரிக்கிறோம் என கூறினோம். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கின்றதோ அங்கு தான் நான் எப்பொழுதும் இருப்பேன். இதுவரை முதல்வரை சந்திக்க அவசியம் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டால் நான் நிச்சயம் சந்திப்பேன். அதிமுக கொறடா ஆணைப்படியே நான் நடந்து வருகின்றேன். ஒரு போதும் எதிர்த்து செயல்பட்டதில்லை." என கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தினகரனின் வேட்பாளர்கள் தோற்றதை தொடர்ந்து அங்கிருந்து விலகி பலர் அதிமுகவை நாடி வருகின்றனர். இந்நிலையில், தினகரன் ஆதரவாளரான கலைச்செல்வனும் அவரை கைவிட்டு விட்டது அமமுகவினரை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
English Summary
kalaichelvan mla says about dhinakaran