இது அதிமுகவின் கோட்டை.,அதை மீண்டும் நிரூபிப்பார்கள்!! உறுதியாக தெரிவித்த அமைச்சர்!!
kadambur raju says about ottapidaram volume
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் மோகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க., வேட்பாளர் மோகன், "ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை நான் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக செயல்படுத்த பாடுபடுவேன்." என உறுதியளித்தார்.
உடனிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
இதுவரை நடந்த தேர்தல்களில் ஓட்டப்பிடாரத்தில் 7 முறை அ.தி.மு.க, வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலிலும் ஓட்டப்பிடாரம், அதிமுகவின் எஃகு கோட்டை என வெற்றி பெற்று நிரூபித்து காட்டுவோம்.
தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பரிசாக தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்பட காத்திருக்கிறது.
கொம்பாடி அணையில் விவசாய பாசனத்திற்கான நீர் தேவைக்கு தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு திட்டம் தற்பொழுது பரிசீலனையில் உள்ளது.
மேலும், இங்கு வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. 50 ஆயிரம் வாக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். ஆனால், மக்களின் எழுச்சிமிகு வரவேற்பை பார்க்கும் போது 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி." என தெரிவித்துள்ளார்.
English Summary
kadambur raju says about ottapidaram volume