கச்சத் தீவு அருகே இந்திய (தமிழகம்) மீனவர்கள் மீது, கற்களை கொண்டு தாக்குதல் நடத்திய சிங்கள படை.!
kachatheevu indian fisher mans attack
கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்தது முதல், இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கச்சத் தீவுப்பகுதி அவர்களுக்கு சொந்தம் என்பதால், கடல் எல்லையை தாண்டி வந்ததாக இந்திய, தமிலாக் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அண்மையில் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை சிங்களப் படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்று வங்க கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்தியாவின், தமிழ்நாட்டில் மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களைக் கொண்டு சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த கொடூர தாக்குதலால் தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
kachatheevu indian fisher mans attack