திருவண்ணாமலை || கபடி பயிற்சியின் போது கர்ணம் அடித்த வீரர், அதன் பின் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கபடி போட்டிக்கான பயிற்சியின் போது கர்ணம் அடித்த வீரர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்க்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். இதில், கலந்து கொள்வதற்காக களத்துமேட்டை சேர்ந்த கே. எம். எஸ் கபடி குழுவினர் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது, அந்த குழுவில் இருந்த கபடி வீரான வினோத்குமார் என்பவர் பயிற்சிக்காக கரணம் அடித்துள்ளார். தொடர்ந்து கரணம் அடிக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kabadi Player Death in THiruvanamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->