தீவிரமடைந்த தென்மேற்குப் பருவமழை.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையை அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர். 

சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதியிலும், தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளையும் வடகிழக்கு மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 26 weather report


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->