முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வுக்கு கிடைத்த தண்டனை….! சிறப்பு நீதி மன்றத்தின் முதல் அதிரடி தீர்ப்பு…! - Seithipunal
Seithipunal


 

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆதல் 2011 வரை, பெரம்பலுார் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், ராஜ்குமார் (வயது 52). கடந்த 2012-ஆம் ஆண்டில், இவர் வீட்டில் 15 வயது சிறுமி, வீட்டு வேலைக்காக சேர்க்கப் பட்டிருந்தார்.

அப்போது, அந்த சிறுமி, “எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை. கூட்டிச் செல்லுங்கள்” என்று கூறியதால், பெற்றோர் அந்த சிறுமியைக் கூட்டிச் செல்ல வந்தனர். ஆனால், அவர்கள் வந்த போது, அந்த சிறுமி, மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

இதனால், அந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், ராஜ்குமாருடன், அவரது நண்பர்களும் சேர்ந்து அந்த சிறுமியை சீரழித்துள்ளதும் தெரிய வந்தது.

ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், இந்த வழக்கு, சென்னையில் தொடங்கப்பட்ட,  சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கு முடிவடைந்து, நீதிபதி சாந்தி, தீர்ப்பளித்தார்.

அதில், கூட்டு சதி, பாலியல் பலாத்காரம், மரணம் ஏற்படக் காரணம் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணம் ஆனதால், ராஜ்குமாருக்கு, ஒவ்வொரு குற்றத்திற்கும், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிபதி தீர்ப்பறித்தார்.

தீர்ப்பின்படி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் 40 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சிறப்பு நீதி மன்றத்தின் அதிரடியான முதல் தீர்ப்பு இது!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judgement against Ex- D.M.K. MLA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->