#தமிழகம் : இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்துள்ள காவிரிபட்டு கிராமத்தின் அருகே தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காவேரிப்பட்டு ஏரிகரையில் கொட்டாறு தரைப்பாலம் பக்கத்தில் ஒரு இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தகவல் அறிந்து, ஜோலார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஒரு இளம் பெண்ணின் உடல் எரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். எரித்து கொலை செய்யப்பட்ட இந்த இளம்பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், யார் கொலை செய்தார்கள் என்பது குறித்தும் டிஎஸ்பி தலைமையில் மூன்று  தனிப்படை அமைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து. காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவலின்படி, இளம் பெண்ணை வெளியூரிலிருந்து இங்கு அழைத்து வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் வைத்து மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் நடக்கும் சம்பவம் போல தமிழகத்தில் நடந்து இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jolarpettei young girl murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->