அரியலூர்: 15 வயது சிறுமியை சீரழித்த இரு கொடூரன்கள்.! ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு.!
jeyakondam littele girl abused
ஜெயங்கொண்டம் அருகே 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம்: விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவன் பிரகாஷ். இவன் அண்மையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளான். சொந்த ஊருக்கு திரும்பிய போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பதினைந்து வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வல்லுறவு செய்துள்ளான்.
மேலும், இதனை அறிந்த அவன் நண்பன் சிவகுமார் என்பவனும், அந்த சிறுமியை மிரட்டி வல்லுறவு செய்துள்ளான். இதனை வீட்டில் தெரிவிக்காத அந்த சிறுமி, கரூர் மாவட்டத்திற்கு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமி தான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து உள்ளார். திரும்பி வரும் வழியிலேயே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து குறைமாதத்தில் பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை, குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைத்த சிறுமி. தனது தாயுடன் ஜெயங்கொண்டம் வந்து, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரகாஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
jeyakondam littele girl abused