'இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதா - ரஜினிகாந்த் வீடுகளில் குண்டு வெடிக்கும்'... கோவையில் இருந்து கிளம்பிய பீதி..? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் வீடும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் சென்னை, போயஸ் கார்டனில் அமைந்துள்ளது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிலும், அருகில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிலும் இன்னும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி விட்டு தொலைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த மிரட்டலை தொடர்ந்து உடனடியாக ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு காவல்துறையினர் விரைந்தனர். மோப்ப நாய்கள் கொண்டு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் தொலைபேசியில் வந்த மிரட்டல் படி வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது.

சென்னை, காவல் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை கோவை காவல்துறையினர் பிடித்தனர்.

அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha--Rajinikanths-homesBomb-threat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->