களத்தில் குதித்த ஜெயக்குமார்.! கடுமையாக விடுத்த எச்சரிக்கை.!
jayakumar speech in ribbon mahal
சென்னையில் இருக்கும் ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதற்கான ஆலோசனை நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்பொழுது உரையாடிய அவர், "144 தடை உத்தரவை மீறி நடப்பவர்கள 14 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கி பணியாற்றுபவர்களை விரட்டினால் அது சட்டப்படி குற்றம் என கருதப்படும். அவ்வாறு செய்பவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை கடைகள் ஆகியவற்றில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றும், 144 தடை உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள். இவ்வாறு அவசியமில்லாமல் சாலைகளில் திரிவோர் 14 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார்கள்." என்று தெரிவித்தார்.
English Summary
jayakumar speech in ribbon mahal