பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 6ஆம் தேதி விடுமுறை.! - Seithipunal
Seithipunal


ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் எனப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். இதற்கிடையே இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிளுக்கு வந்து நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருச்சி மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாகும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

january six holiday for vaikunda yegathasi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->