ஜனவரி 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
January 3 local holiday for Nagapattinam district
ஜனவரி 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு ஜனவரி 3ம் தேதி அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய வரும் ஜனவரி 21ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
January 3 local holiday for Nagapattinam district