ஜனவரி 16ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளும் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!
January 16 all meat closed in covai
கோவையில் வரும் ஜனவரி 16ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்க கூடாது. இந்த உத்தரவை மீறி சட்ட விரோதமாக இறைச்சி விற்பனை செய்வோம் இது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
January 16 all meat closed in covai