தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்...!!
Intensive work to prevent an inynfections Minister Ma Subramanian
தமிழகத்தில் எந்த தொற்று வந்தாலும் அதனை தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வருவாய்துறை சார்பில் முதியோர, மாற்றுதிறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன் உதவிதொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியபட்டுள்ளதால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகின்ற 12ம் தேதி 10 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
English Summary
Intensive work to prevent an inynfections Minister Ma Subramanian